முள்ளையும், கல்லையும் பாதைகளாக்கி ..
சேறையும், குப்பையும் காற்றினில் தூவி..
வியாதியை உடம்பினில் ஆடையாக்கி ..
இன்று என்ன செய்வது என தெரியாமல்
இந்த உலக மக்கள் கஷ்டப்படுவதை பார்க்கமுடியாமல்
நானும் என் மனமும் நற்பணிகளில் நாட்டம் கொண்டோம்.
அதன் விளைவாக செய்த நற்பணிகளினால் என் மனம் உவந்தது உண்மையே ..
1970 ல் நமது மாமதுரையில் பிறந்த நான் கடந்த 28 வருடமாக இந்த பகுதியில்
வசித்து வருகிறேன் இந்த பகுதியை பற்றி நன்றாக தெரிந்த பின், இந்த
பகுதியின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது இயலாத செயல்கள் தான்
என்னை இன்று உங்கள் முன் நிறுத்தியிருக்கிறது என்பது மிகப்பெரிய உண்மை.