மதுவை விலக்கு

பொங்கல், தீபாவளி, புத்தாண்டு என எந்த பண்டிகை என்றாலும், டாஸ்மாக் விற்பனையில், தமிழகம் தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருகிறது. மதுரையில் கடந்தாண்டு புத்தாண்டு நேரத்தில் எட்டு கோடி ரூபாய்க்கும், இந்த புத்தாண்டில் ஒன்பது கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்துள்ளது என்பது சிந்திக்க வேண்டிய தகவல். இளைஞர் பட்டாளம் மதுவை நோக்கி சென்று போதைக்கு அடிமையாவது எதிர்கால இந்தியாவிற்கு பெரிய சவாலாக அமையும்.
குடி குடியை கெடுக்கும்’ என்று எத்தனை தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், நாளுக்கு நாள் மது அருந்துபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது. மது அரக்கனின் பிடியில் சிக்கி, சிந்தனை சிதறி,வளங்களை எல்லாம் இழந்து வாடுபவர்கள் எத்தனை பேரோ? உடலையும், சமூகத்தையும் சீரழிக்கும் இந்த மதுவினால் உண்டாகும் பாதிப்புகள் குறித்து நிபுணர்களின் கருத்து :
குடித்த பின் என்ன நடக்கும்? தமிழ்நாடு மனநல திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சி. ராமசுப்பிரமணியம் :மது வயிற்றுக்குச் சென்று, ரத்த ஓட்டத்தில் கலந்து, மூளை செயல்படும் விதத்தை குறைத்து, உணர்ச்சிகளையும், சிந்திக்கும், பேசிப் பழகும் மற்றும் செயல்படும் விதத்தையும் மாற்றுகிறது. கல்லீரல் சிறிது சிறிதாக மதுவை ரத்தத்தில் இருந்து வெளியேற்றுகிறது. 30 மில்லி பிராந்தியை ஜீரணிக்க, கல்லீரலுக்கு ஒரு மணி நேரம் தேவைப்படும். மது குடிப்பதால் வயதான தோற்றம், வாய், தொண்டை, வயிற்றில் புற்றுநோய், நோய் தடுப்பு தன்மை குறைதல், இருமல், சளி, கல்லீரல் வீக்கம், பசி குறைந்து ஜீரணசக்தி பாதிப்பு, மஞ்சள்காமாலை, கை, கால் நடுக்கம், தசை பலம் குறைதல், ரத்தச்சோகை, புத்தி கூர்மை மழுங்குவது, தூக்கமின்மை, இருதய வீக்கம், ஆண்மை குறைவு, மூட்டு வலி போன்றவை ஏற்படும்.
குடிக்கு அடிமையானவர்கள் தற்கொலை அல்லது மரணத்தை தழுவுகின்றனர்.21 வயதிற்குட்பட்ட இளைஞர்கள், குடிக்கு அடிமையானவர்கள், மஞ்சள் காமாலை, கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள், மனநிலை பாதித்தவர்கள் குடித்தால் பாதிப்பு பல மடங்காகும். உடல் பலத்திற்கு தேவையான சத்து மதுவில் இல்லை. சத்தான உணவு, உடற்பயிற்சியும் மட்டுமே வலிமை தரும்.
மனதை மாற்றுவது எப்படி?மதுரை எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை திரிசூல் மருத்துவமனை உளவியல்நிபுணர் ரவிச்சந்திரன் :குடியினால் செய்யும் வேலையின் அளவு, தரம் குறையும். சக ஊழியர்களுடன் ஒத்துப்போக இயலாது. குடும்பத்தில் தகராறு ஏற்படும். மற்றவர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்துவர். மனைவி மீது சந்தேகம் எழும். பணப்பற்றாக்குறை ஏற்பட்டு, கடனுக்கு பிறரிடம் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்படும். குடிப்பதை குடிப்பவர் தான் நிறுத்த வேண்டும். பிறர் உதவியும் ஊக்கமும் தான் தர முடியும். குடிக்கும் முன், “நான் ஏன் குடிக்க வேண்டும்?’ என்று, நம்மை நாமே கேட்பதன் மூலம் அதை தவிர்க்கலாம். குடிக்கு அடிமையானவர்களை, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்களுடன் பேச செய்வதன்மூலம் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தி, குடியை நிறுத்தலாம்.
குடிப்பதை தவிர்க்க வழிகள்: மதுரை சமூக அறிவியல் கல்லூரி பேராசிரியர் கண்ணன்: குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் செய்தால் உறுதியாக முடியும். நம்பிக்கை உடையவரிடம் மனம் விட்டு பேசுவது, கோயிலுக்கு செல்வது, பாட்டு கேட்பது மன நிம்மதியை தரும். தெளிவாக யோசிப்பது, அதை தெரிந்தவருடன் கலந்தாலோசிப்பது, முயற்சி செய்வது தீர்வு தரும். குடிப்பதை குறைத்தால் ஏற்படும் நன்மைகளை பற்றி சிந்திக்க வேண்டும். அதிகமாக குடிக்க நேரிடும் இடம், சூழ்நிலையை கண்டறிந்து, அதை தவிர்க்க வேண்டும். இரவு விருந்தை தவிர்க்க வேண்டும்.
விருந்துகளுக்கு தாமதமாக உணவு அருந்தும் சமயத்தில் சென்றால், குடிக்காமல் சமாளிக்கலாம். சம்பள தினம், ஓய்வு நாட்களில் நண்பர்களுடன் குடிப்பது வழக்கம் எனில் அன்றைய நாளை எதாவது காரணம் கூறி தவிர்த்து விடலாம். தவிர்க்கவே முடிய வில்லை என்று தினமும் குடிக்க நினைப்பவர்கள், வாரத்தில் இரண்டு நாட்களாவது குடிக்காமல் இருக்க முதலில் உறுதி கொள்ள வேண்டும்.
அப்படியும் குடித்தால் உணவு உட்கொள்வது அவசியம். போதையில் இருக்கும்போது பேசுவதை தவிர்க்கவும். குடியால் சாதிப்பது எதுவும் இல்லை என தெரிந்துக் கொள்ளவும். “குடிப்பது அவசியம்தானா’ என தங்களுக்குள் யோசிக்க வேண்டும். மது பழக்கத்திற்கு அடிமையானவர்களை, அதற்கான மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags: "நான் ஏன் குடிக்க வேண்டும்?' என்று, அதற்கான மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்., அதை தவிர்க்க வேண்டும். இரவு விருந்தை தவிர்க்க வேண்டும். விருந்துகளுக்கு தாமதமாக உணவு அருந்தும் சமயத்தில் சென்றால், அதை தெரிந்தவருடன் கலந்தாலோசிப்பது, ஆண்மை குறைவு, இந்த புத்தாண்டில் ஒன்பது கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்துள்ளது என்பது சிந்திக்க வேண்டிய தகவல். இளைஞர் பட்டாளம் மதுவை நோக்கி சென்று போதைக்கு அடிமையாவது எதிர்கால இந்தியாவிற்கு பெரிய சவாலாக அமையும். , இருதய வீக்கம், இருமல், உடற்பயிற்சியும் மட்டுமே வலிமை தரும். மனதை மாற்றுவது எப்படி?மதுரை எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை திரிசூல் மருத்துவமனை உளவியல்நிபுணர் ரவிச்சந்திரன் :குடியினால் செய்யும் வேலையின் அளவு, உணர்ச்சிகளையும், உறவினர்கள், ஓய்வு நாட்களில் நண்பர்களுடன் குடிப்பது வழக்கம் எனில் அன்றைய நாளை எதாவது காரணம் கூறி தவிர்த்து விடலாம். தவிர்க்கவே முடிய வில்லை என்று தினமும் குடிக்க நினைப்பவர்கள், கடனுக்கு பிறரிடம் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்படும். குடிப்பதை குடிப்பவர் தான் நிறுத்த வேண்டும். பிறர் உதவியும் ஊக்கமும் தான் தர முடியும். குடிக்கும் முன், கர்ப்பிணிகள், கல்லீரலுக்கு ஒரு மணி நேரம் தேவைப்படும். ம து குடிப்பதால் வயதான தோற்றம், கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கல்லீரல் வீக்கம், கால் நடுக்கம், குடிக்காமல் சமாளிக்கலாம். சம்பள தினம், குடிக்கு அடிமையானவர்கள், குடியை நிறுத்தலாம். குடிப்பதை தவிர்க்க வழிகள்: மதுரை சமூக அறிவியல் கல்லூரி பேராசிரியர் கண்ணன்: குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் செய்தால் உறுதியாக முடியும். நம்பிக்கை உடையவரிடம் மனம் விட்டு, குழந்தைகள், கை, கோயிலுக்கு செல்வது, சமூகத்தையும் சீரழிக்கும் இந்த மதுவினால் உண்டாகும் பாதிப்புகள் குறித்து நிபுணர்களின் கருத்து : குடித்த பின் என்ன நடக்கும்? தமிழ்நாடு மனநல திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சி. ராமசுப்பிரமணிய, சளி, சிந்தனை சிதறி, சிந்திக்கும், சூழ்நிலையை கண்டறிந்து, டாஸ்மாக் விற்பனையில், தசை பலம் குறைதல், தமிழகம் தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருகிறது. மதுரையில் கடந்தாண்டு புத்தாண்டு நேரத்தில் எட்டு கோடி ரூபாய்க்கும், தரம் குறையும். சக ஊழியர்களுடன் ஒத்துப்போக இயலாது. குடும்பத்தில் தகராறு ஏற்படும். மற்றவர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்துவர். மனைவி மீது சந்தேகம் எழும். பணப்பற்றாக்குறை ஏற்பட்டு, தீபாவளி, தூக்கமின்மை, தொண்டை, நண்பர்களுடன் பேச செய்வதன்மூலம் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தி, நம்மை நாமே கேட்பதன் மூலம் அதை தவிர்க்கலாம். குடிக்கு அடிமையானவர்களை, நாளுக்கு நாள் மது அருந்துபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது. மது அரக்கனின் பிடியில் சிக்கி, நோய் தடுப்பு தன்மை குறைதல், பசி குறைந்து ஜீரணசக்தி பாதிப்பு, பாட்டு கேட்பது மன நிம்மதியை தரும். தெளிவாக யோசிப்பது, புத்தாண்டு என எந்த பண்டிகை என்றாலும், புத்தி கூர்மை மழுங்குவது, பேசிப் பழகும் மற்றும் செயல்படும் விதத்தையும் மாற்றுகிறது. கல்லீரல் சிறிது சிறிதாக மதுவை ரத்தத்தில் இருந்து வெளியேற்றுகிறது. 30 மில்லி பிராந்தியை ஜீரணிக்க, மஞ்சள் காமாலை, மஞ்சள்காமாலை, மது அருந்துபவர்களே...இதுவும் ஒரு நோய் தான் வேண்டாமே...மதுரை:பொங்கல், மனநிலை பாதித்தவர்கள் குடித்தால் பாதிப்பு பல மடங்காகும். உடல் பலத்திற்கு தேவையான சத்து மதுவில் இல்லை. சத்தான உணவு, முயற்சி செய்வது தீர்வு தரும். குடிப்பதை குறைத்தால் ஏற்படும் நன்மைகளை பற்றி சிந்திக்க வேண்டும். அதிகமாக குடிக்க நேரிடும் இடம், மூட்டு வலி போன்றவை ஏற்படும். குடிக்கு அடிமையானவர்கள் தற்கொலை அல்லது மரணத்தை தழுவுகின்றனர்.21 வயதிற்குட்பட்ட இளைஞர்கள், மூளை செயல்படும் விதத்தை குறைத்து, ரத்த ஓட்டத்தில் கலந்து, ரத்தச்சோகை, வயிற்றில் புற்றுநோய், வளங்களை எல்லாம் இழந்து வாடுபவர்கள் எத்தனை பேரோ? உடலையும், வாய், வாரத்தில் இரண்டு நாட்களாவது குடிக்காமல் இருக்க முதலில் உறுதி கொள்ள வேண்டும். அப்படியும் குடித்தால் உணவு உட்கொள்வது அவசியம். போதையில் இருக்கும்போது பேசுவதை தவிர்க்கவும்.