படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற நமது முன்னால் ஜனாதிபதி திரு
அப்துல் கலாம் அவர்களின் ஆசியோடு எனது முதல் படியில் காலடி எடுத்து
வைக்கிறேன்...
இன்று மதுரை மாநகரின் 59 -வது வார்டினில்
உறுப்பினர் பதவிக்கு நமது தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக வேட்பாளராக
நிறுத்தபட்டுள்ளேன். அந்த பெருமையை தந்த காங்கிரஸ் கட்சிக்கும், எனது
கட்சியில் பெரிய பொறுப்பிலிருக்கும் பெரியவர்களுக்கும் மற்றும் எனது
நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து இதன் மூலம் கொள்கிறேன். கட்சி
பெரியவர்கள் மற்றும் நண்பர்களின் மேலான ஆதரவுடன் 59 -வது வார்டினில் பொது
மக்களின் நன்மதிப்பை பெற்று பெருவாரியாக ஓட்டுக்களை பெறுவேன் என்று
மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகிறேன்.
மேலும் எனது வார்டினில் உள்ள பொது மக்களுக்காக சேவை செய்ய எந்த நேரமும்
காத்திருப்பேன் என்று உறுதி பூண்டு, இந்த இணையதளம் மூலம் என்னை தொடர்பு
கொள்ள அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.